Map Graph

மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்பு (1303)

மங்கோலியர்களின் இந்திய படையெடுப்புகளின் ஒரு பகுதி

1303 இல் தில்லி ராணுவத்தின் இரண்டு முக்கிய பிரிவுகள் நகரத்தில் இருந்து தொலைவில் இருந்த போது அதை சகதை கானேட்டிலிருந்து வந்த ஒரு மங்கோலிய ராணுவம் தில்லி சுல்தானகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. தொலைவில் ராஜஸ்தானின் சித்தூரில் இருந்த தில்லி சுல்தான் அலாவுதீன் கல்ஜி மங்கோலியர்கள் அவர்களது அணிவகுப்பை தொடங்கியபோது டெல்லிக்கு அவசரமாக விரைந்தார். எனினும் அவரால் போதிய போர் தயார்நிலை நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிரி கோட்டையில் நல்ல பாதுகாப்புடன் கூடிய முகாமில் அவர் தங்க முடிவெடுத்தார். தரகையின் தலைமையில் வந்த மங்கோலியர்கள் தில்லியை 2 மாதங்களுக்கும் மேலாக முற்றுகையிட்டனர். அதன் புறநகர் பகுதிகளை சூறையாடினர். இறுதியாக அலாவுதீனின் முகாமுக்குள் நுழைய முடியாததால் அவர்கள் பின்வாங்க முடிவெடுத்தனர்.

Read article